குடும்ப பிரச்சனையால் குழந்தைகளுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை
விருதுநகர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்
HIGHLIGHTS
விருதுநகர் அருகே உள்ள தம்மநாயக்கண்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (31). சிவக்குமாருக்கும் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த லட்சுமி பிரியாவுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சிவகுமார் மற்றும் லட்சுமிபிரியா தம்பதியினருக்கு தர்ஷினி (9) என்ற பெண் குழந்தையும் சிவ சண்முகவேல் (5) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். சிவகுமார் வச்சக்காரப்பட்டியில் உள்ள தனியார் பால்பண்ணையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் சிவகுமார் ஒரு பெண்ணுடனும் லட்சுமி பிரியா வேறு ஒருவருடன் அடிக்கடி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் அடிக்கடி சண்டை நடந்து உள்ளது. இந்த நிலையில் இன்று காலையிலும் கணவன் மனைவிக்கும் இடையே சண்டை நடந்து உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமிபிரியா தன்னுடைய குழந்தைகளுடன் ஆடு மேய்க்க சென்ற போது தம்மநாயக்கன்பட்டியில் உள்ள செல்வராஜ் என்பவரின் கிணற்றில் தன்னுடைய 2 குழந்தைகளுக்கும் எறும்பு மருந்தை கொடுத்து கிணற்றில் தள்ளி விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் வெகு நேரம் ஆகியும் தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் காணவில்லை என்று சிவக்குமார் ஆடு மேய்க்கும் பகுதிக்கு சென்று பார்த்த போது, கிணற்றில் மனைவியும் குழந்தைகளும் இறந்து கிடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக தீயணைப்பு துறைக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்து உள்ளார்.
தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த வச்சக்காரப்பட்டி போலீசாரும் தீயணைப்பு துறையினரும் லட்சுமி பிரியா மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்களையும் கிணற்றில் இருந்து மீட்டு விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வசகரபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் மற்றும் இரண்டு குழந்தைகளும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது