/* */

அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மாஃபா பாண்டியராஜன் பதிலடி

பாஜகவுடன் மத்தியில் ஆட்சியில் இருந்த போது திமுகவின் சமூகநீதி கொள்கை எங்கே சென்றது என தங்கம் தென்னரசுக்கு மாஃபா பாண்டியராஜன் கேள்வி

HIGHLIGHTS

அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மாஃபா பாண்டியராஜன் பதிலடி
X

அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் 

விருதுநகர் நகராட்சியில் 15வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர் பேசிய மாஃபா பாண்டியராஜன்,

சமூக நீதியின் முதல் குரல் விருதுநகர் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் எழுந்தது சமூகநீதி காத்த வீராங்கனை என்று யாருக்கு பட்டம் கொடுத்தார்கள் என தங்கம் தென்னரசுவிற்கு தெரியும். சமூகநீதி 69 விழுக்காடு என நிலைநாட்டியது ஜெயலலிதாதான் என்பது தங்கம் தென்னரசுவிற்கு தெரியும். சமூகநீதி என்றாலே அது அதிமுக ஆட்சிதான் என அரசியல் அரிச்சுவடி படித்தவர்களுக்கு தெரியும். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் சமூக நீதிக்காக பெரும்பங்காற்றியுள்ளார்கள்

சமூகநீதி கட்டமைப்புக்கான முதல் அழைப்பிதழை சோனியா காந்தியிடம் வழங்கியுள்ளனர். காங்கிரஸ் சமூகநீதிக்கு எதிரான கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக உட்காருமா அது சாத்தியமா அதைத்தான் ஓபிஎஸ் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், திமுக பாஜக உடன் 5 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது பாஜகவின் சமூகநீதி பற்றி திமுகவிற்கு தெரியவில்லையா தேர்தலுக்காக கூட்டணி வைத்து இருப்பதால் அவர்களுடைய கொள்கைகளை எங்கள் கொள்கைகளாக கூற முடியாது. சமூக நீதி பற்றிய விரிவான பார்வை அதிமுகவிற்கு உள்ளது என தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு எதிரான அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காதது குறித்து பதில் அளித்த மாஃபா. பாண்டியராஜன் நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அரசு தான். எங்களுடைய கோரிக்கைகள் குறித்து தெளிவாக உள்ளோம் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு அதை தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டியுள்ளது. நீட் தேர்வை நாங்கள் கொண்டு வந்தது என்று கூறுவது சட்டரீதியாக எதிரான நடவடிக்கை கல்வி அமைச்சராக இருந்த போது எந்த இடத்திலும் நான் நீட் தேர்விற்காக கையெழுத்திடவில்லை. இதை எங்கு வேண்டுமானாலும் நான் கூற முடியும். இதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று நாங்கள் வாதடினோம். உச்சநீதிமன்றம் நீட் தேர்வை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

ஸ்டாலின் 12 மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். எந்த மாநில முதலமைச்சராவது அதற்கு பதிலளித்தார்களா? அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக் கொள்ளும் போது, ஒரு மாநிலம் மட்டும் எதிர்த்து போராடி, அதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது அதிமுக அரசு தான். எங்களால் என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் நாங்கள் செய்துள்ளோம் என தெரிவித்த பாண்டியராஜன் அதே நேரத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 7.5% இட ஒதுக்கீடும் கொண்டு வந்துள்ளோம். இன்று 540 ஏழை குழந்தைகள் நீட் தேர்வின் மூலமாக மருத்துவ படிப்பு படிப்பதற்கு காரணம் எடப்பாடி அரசு தான் அந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கூட திமுக எதிர்த்தது. தற்போது 8% மாணவர்கள் நீட் தேர்வின் மூலமாக தேர்வாகியுள்ளனர் என்றார்.

செங்கலை கையில் வைத்துக் கொண்டு ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வுக்கு எதிராகதான் என உதயநிதி கூறினார் உச்சநீதிமன்ற உத்தரவு இருக்கும் போது எப்படி நீங்கள் அதை செய்வீர்கள் என கேட்டதற்கு எங்களிடம் இரகசிய திட்டம் இருக்கிறது எனக் கூறிய உதயநிதி இப்போது எங்கே இருக்கிறார்? இல்லாத விஷயங்களை இருப்பதாக கூறி எல்லாரையும் ஏமாற்றிய திமுக அரசு தற்போது ஏமாந்து நிற்கிறது

நீட் தேர்வை பொருத்தவரை திமுகவின் முழுக்க முழுக்க ஏமாற்று வேலை நடைபெற்று வருகிறது மாணவர்களுக்கான பயிற்சி மையத்தை மீண்டும் தொடங்குங்கள் முடிந்தால் 7.5% இட ஒதுக்கீட்டை முடிந்தால் 12.5% அதிகரிக்க முயற்சி செய்யுங்கள் அதற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம் அதில் அரசு உதவி பெறும் பள்ளியையும் கொண்டு வாருங்கள் என்றார்

Updated On: 6 Feb 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?