தமிழ்நாடு முழுவதும் மாதிரி நாடாளுமன்றம்: இ.கம்யூ செயலாளர் வீரபாண்டியன் பேட்டி
தமிழ்நாடு முழுவதும் மாதிரி நாடாளுமன்றம் ஏற்படுத்த உள்ளோம் மத்திய அரசுக்கு எதிராக என விருதுநகரில் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொது செயலாளர் வீர பாண்டியன் பேட்டி
HIGHLIGHTS
விருதுநகரில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க தென்மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
முன்னதாக விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொது செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்கள் சந்தித்தார் அப்போது அவர் தெரிவிக்கையில்,
டெல்லி விவசாயிகள் போராட்ட கோரிக்கையை ஏற்று பிரதமர் இறங்கி வர வேண்டும், ஒலிம்பிக்கில் சாதனைபடைத்த வீரர்களுக்கு பாராட்டுகள், மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தில் ஜாதி பாகுபாடு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக மாதிரி நாடாளுமன்றம் ஏற்படுத்த உள்ளோம். நாட்டின் ஒற்றுமையில் கை வைக்கிறார்கள் மத்திய பாஜக அரசு. தமிழக அரசின் வெள்ளை அறிக்கை வெளியிடுவது ஜனநாயகத்தை வலுசேர்க்கிறது, வரவேற்கத்தக்கது.
மேகதாது அணை கட்டுவது நாட்டின் ஒற்றுமைக்கு நெருக்கடி ஏற்படுத்தும். நிறைய ஒடுக்கப்பட்டவர்கள் சிறையில் உள்ளனர், அவர்கள் குற்றமே செய்யாமல் நீண்ட காலமாக சிறையில் உள்ளனர். அவர்கள் வெளிக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.