Begin typing your search above and press return to search.
மின்வாரியத்தினருக்கே "ஷாக்" கொடுத்த பாம்பு!
விருதுநகரில், மின் பகிர்மான அலுவலகத்தில் பதுங்கி இருந்த பாம்பை, தீயணைப்புத்துறையினர் பிடித்துச் சென்றனர்.
HIGHLIGHTS
விருதுநகர், ராஜலட்சுமி தியேட்டர் அருகில் உள்ள மின்சாரம் பகிர்மான அலுவலகத்தில், நேற்று பாம்பு ஒன்று பதுங்கிக் கொண்டது. இதை எதேச்சையாக பார்த்த மின்வாரிய ஊழியர்கள், அச்சமடைந்தனர்.
உடனடியாக, இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், அலுவலகத்தில் பதுங்கி இருந்த பாம்பை தேடினர். ஒருவழியாக, பதுங்கி இருந்த சுமார் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு, பிடிபட்டது.
பாம்பு பிடிக்கும் உபகரணத்தை கொண்டு, பாம்பின் உயிருக்கு தீங்கு நேராத வண்ணம் தீயணைப்புத்துறையினர் லாவகமாக படித்தனர். பின்னர், அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் பாம்பை விட்டனர். இதன் பின்னரே, மின்வாரிய அலுவலகத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.