குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், கணவர் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
விருதுநகர் என்ஜிஓ காலனி கம்பர் தெருவைச் சேர்ந்தவர்கள் கற்பகம் கண்ணன் தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் கண்ணன் திருமங்கலத்தில் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். மனைவி குடும்பத் தலைவியாக இருந்து வருகிறார். இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வந்த நிலையில், இன்று காலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்த கண்ணன் கற்பகத்தை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே கற்பகம் உயிரிழந்தார். இதையடுத்து கண்ணன் விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊரக காவல் துறையினர் உயிரிழந்த கற்பகத்தின் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்