தேசிய குழந்தைகள் தினத்தையாெட்டி விழிப்புணர்வு பிரச்சார வாகனம்: ஆட்சியர் துவக்கி வைப்பு
விருதுநகரில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் தேசிய குழந்தைகள் தினம் (நவம்பர்-14) முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் தேசிய குழந்தைகள் தினம் (நவம்பர்-14) முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி. கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் வேர்ல்டு விசன் இந்தியா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு குறித்த நடமாடும் விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தினையும், குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர், குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தல் தொடர்பான கையெழுத்து விழிப்புணர்வு இயக்கத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாத ரெட்டி துவக்கி வைத்தார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் குழந்தைத் திருமண தடுப்பு குறித்த விழிப்புணர்வு சுவரொட்டி மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.