கொரோனோ நோயாளிகளுக்கு நிவாரண பொருட்கள் - உதவும் தன்னார்வலர்கள்
விருதுநகர் அரசு மருத்துவமனை;
HIGHLIGHTS
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனோ பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
கொரோனோ பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில்மாவட்ட நிர்வாகத்தோடு கைகோர்த்து பல்வேறு அமைப்புகளும் தன்னார்வளர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானம் சார்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனோ நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கும் பொருட்கள் வழங்கப்பட்டன.
மருத்துவமனை கல்லூரி முதல்வர் மருத்துவர் திருவாசகமணி, கண்காணிப்பாளர் மருத்துவர் பழனிகுமார், துணை கண்காணிப்பாளர் மருத்துவர் அன்புவேல் ஆகியோரிடம் தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் கே.வி.ஆர். பிரபாகரன், கே. ஜி. கணேசன், கண்ணபிரான் ஆகியோர் 25 கிலோ அடங்கிய 11 அரிசி மூட்டைகள், துவரம் பருப்பு 50 கிலோ, கடலை எண்ணெய் 15 கிலோ, இரண்டு ரெப்ரிஜிரேட்டர், 1000 முக கவசம் உள்ளிட்ட 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது.