/* */

தீப திருவிழா: டாஸ்மாக் கடைகள் மூடல்

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

தீப திருவிழா: டாஸ்மாக் கடைகள் மூடல்
X

மாதிரி படம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று நடைபெற்ற நிலையில் வருகின்ற நவம்பர் 19ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் வருகிற 17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 11 Nov 2021 1:43 PM GMT

Related News