/* */

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளை துணியால் வாயைக் கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்.

HIGHLIGHTS

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்
X

வெள்ளை துணியால் வாயைக் கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளை துணியால் வாயைக் கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம்.

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை காந்திசிலை அருகில் தெற்கு மாவட்ட, நகர காங்கிரஸ் கட்சியினர் வெள்ளை துணியால் வாயைக் கட்டிக்கொண்டு அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் சின்னதுரை, புருஷோத்தமன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் காமராஜ், நகர துணைத்தலைவர் கதிர்காமன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் வினோதினி, மாவட்ட பொறுப்பாளர் இந்திரா பிரியன் கிருஷ்ணமூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் என்.வெற்றிச்செல்வன் நன்றி கூறினார்.

Updated On: 20 May 2022 6:57 AM GMT

Related News