/* */

திருவண்ணாமலை நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு அமைச்சர் பாராட்டு

திருவண்ணாமலை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி அமைச்சர் எ.வ. வேலு பாராட்டு

HIGHLIGHTS

திருவண்ணாமலை நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு அமைச்சர் பாராட்டு
X

திருவண்ணாமலை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய  அமைச்சர்  எ.வ வேலு 

திருவண்ணாமலை அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிவாரண பொருட்களை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார். திருவண்ணாமலை நகராட்சி தூய்மைப் பணியாளர்களின் பணி மிகவும் பாராட்டுதலுக்குரியது என அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர், நகராட்சி ஆணையர், நகராட்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Jun 2021 2:00 PM GMT

Related News