அருந்ததியினர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா: வட்டாட்சியர் வழங்கினார்

அருந்ததியினர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா: வட்டாட்சியர் வழங்கினார்
X

போளூர் வட்டம், ராந்தம் கிராமத்தில் அருந்ததியினர் வகுப்பை சார்ந்த ஏழு நபர்களுக்கு வீட்டு மனை பட்டா உத்தரவினை வட்டாட்சியர் சண்முகம் வழங்கினார். 

போளூர் வட்டத்தி அருந்ததியினர் வகுப்பைச் சார்ந்த நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வட்டாட்சியர் வழங்கினார்

போளூர் வட்டம், ராந்தம் கிராமத்தில் பட்டா புறம்போக்கில் வீடு கட்டி வசித்து வந்த அருந்ததியினர் வகுப்பை சார்ந்த ஏழு நபர்களுக்கு வீட்டு மனை பட்டா உத்தரவினை வட்டாட்சியர் சண்முகம் வழங்கினார். இந்நிகழ்வில் வருவாய் ஆய்வாளர் பேபி இந்திரா, கிராம நிர்வாக அலுவலர் அன்புமணி, ராந்தம் ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் சித்ரா மற்றும் அலுவலக ஊழியர்கள் உடனிருந்தனர்.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவுக்கு உட்பட்ட அருங்குணம், மாவளவாடி, சத்தியவாடி ஆகிய கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் அருங்குணம் கிராமத்தில் நடைபெற்றது. தாசில்தார்கள் முருகானந்தம், சுபாஷ்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி, 153 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முகாமில் தோட்டக்கலை உதவி இயக்குநர் தெய்வசிகாமணி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இடுபொருள்கள் வழங்கினார். ஊட்டச்சத்து மற்றும் குழந்தை நல அலுவலர் மரியம்மாள் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் ஆனந்தகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தாராமன், ஏழுமலை, பத்மினி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story