/* */

காளை விடும் விழா; வேடிக்கை பார்த்த தொழிலாளி மாடு முட்டி பலி

கலசப்பாக்கம் அருகே காளை விடும் விழாவில் மாடு முட்டி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

காளை விடும் விழா; வேடிக்கை பார்த்த தொழிலாளி மாடு முட்டி பலி
X

மாடு முட்டி தொழிலாளி பலி (கோப்பு படம்)

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்சோழங்குப்பம், வீரளூர், ஆதமங்கலம் புதூர், கேட்டவரம்பாளையம், கீழ்பாலூர், கடலாடி உள்பட பல்வேறு கிராமங்களில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நடைபெற்றது

காலை விடும் விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து போலீஸ் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்நிலையில், கீழ்பாலூர் கிராமத்தில் நேற்று காளை விடும் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கலசபாக்கம் அருகே குப்பம் கிராமம் பூங்காவனத்தம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 50), கூலித் தொழிலாளி. இவர் கீழ்பாலூர் கிராமத்தில் காளை விடும் திருவிழாவை பார்க்க செல்வதாக மனைவி குமாரியிடம் கூறிவிட்டு வந்துள்ளார்.

காளை விடும் விழாவை பார்த்துக்கொண்டு, ஓரமாக நின்றிருந்த கார்த்தி மீது திடீரென காளை மாடு ஒன்று முட்டி மோதி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த கார்த்திக்கை உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கார்த்திக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

Updated On: 18 Jan 2023 1:54 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  7. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  8. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  9. ஈரோடு
    அந்தியூரில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்த எம்.எல்.ஏ. வெங்கடாஜலம்
  10. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...