/* */

அந்தியூரில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்த எம்.எல்.ஏ. வெங்கடாசலம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் நகரில் திமுக கட்சியின் சார்பில் நீர்மோர் பந்தலை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

அந்தியூரில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்த எம்.எல்.ஏ. வெங்கடாசலம்
X

அந்தியூர் தவிட்டுப்பாளையம் பிரம்மதேசம் பிரிவில் திமுக சார்பில் நீர்மோர் பந்தலை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அந்தியூர் நகரில் திமுக கட்சியின் சார்பில் நீர்மோர் பந்தலை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் நகரில் பொதுமக்கள் நடமாட்டம் மிகக் குறைவாக காணப்படுகிறது.

இதனால், பொதுமக்களின் உடல் நலனைக் கருதி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் அந்தியூர் பேரூர் திமுக சார்பில் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா மற்றும் தவிட்டுப்பாளையம் பிரம்மதேசம் பிரிவு ஆகிய பகுதிகளில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, அந்தியூர் பேரூர் திமுக செயலாளர் எஸ்.கே.காளிதாஸ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து மக்களுக்கு நீர்மோர், தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய திமுக பொருளாளர் பிரகாசம், ஈரோடு வடக்கு மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், பேரூர் துணைச் செயலாளர் பாப்பாத்தி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் யாஸ்மின் தாஜ், கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 April 2024 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  2. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  3. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  5. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  6. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  8. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  10. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!