நெல்லை மாநகராட்சியில் உலக நீரிழிவு தின சிறப்பு முகாம்: ஆணையாளர் துவக்கி வைப்பு
நெல்லை மாநகராட்சியில் நடைபெற்ற உலக நீரிழிவு தின சிறப்பு முகாமை ஆணையாளர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு சிறப்பு முகாம் நடைபெற்றது.
உலகமக்கள் தொகையில் ஆறு சர்க்கரை நோயாளிகளில் ஒருவர் இந்தியாவில் இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. உலக சர்க்கரை நோயாளிகள் 17 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். உலக அளவில் 46 கோடியே 50 லட்சம் நீரிழிவு நோயாளிகளில் இந்தியாவில் மட்டும் 7 கோடியே 70 லட்சம் பேர் உள்ளனர். உலகில் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நீரிழிவு நோய் நிரந்தர நோயாகவும், நோய் தாக்கத்தின் அறிகுறிகள் பாதிப்பிற்குள்ளான நோயாளிகளுக்கு தெரியாத வகையில் இந்த நோய் பரவி வருகிறது. அவ்வப்போதைய சர்க்கரை பரிசோதனையும், நோய் கட்டுப்பாட்டு முறையும், உரிய சிகிச்சையும் நோயாளிகள் மேற்கொள்ள வேண்டும். ஆகவே நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி, கண்காட்சி, கருத்தரங்கம், நோய் கண்டறிதல் முகாம் போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உலக நீரழிவு தினத்தையொட்டி நெல்லை மாநகராட்சி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமணை இணைந்து நடத்திய நீரிழிவு விழித்திரை கண்டறிதழ் முகாமினை மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் தொடங்கி வைத்தார். இந்த முகாம் நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாமில் மாநகர் நல அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அரவிந்த் கண்மருத்துவமணை மருத்துவர்கள் மீனாட்சி, சைல்லி, மதுரா, மேலாளர்கள் நவநீதகிருஷ்ணன், முத்துபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.