Begin typing your search above and press return to search.
திருநெல்வேலி மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்
திருநெல்வேலியில் கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்கான கூட்டமும் படிப்படியாக குறைந்து வருகிறது-இதுவரை 3.40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது
HIGHLIGHTS
திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 3.40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்துக்கு 10,500, தென்காசி மாவட்டத்துக்கு 8,000 கோவிஷீல்டு தடுப்பூசி இன்று வரவுள்ளது. கோவாக்சின் தடுப்பூசிகள் இன்னும் 3 நாட்களில் வரவுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக 2 மையங்கள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக போடப்படவில்லை. மேலும் கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்கான கூட்டமும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் இங்கு செயல்பட்ட ஒரு மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிட்தக்கது.
திருநெல்வேலி மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்...