காவல்துறையினருக்கு துரை வைகோ முக கவசங்கள் வழங்கினார்
நெல்லை மாவட்ட காவல்துறையினருக்கு மாவட்ட கண்காணிப்பாளரிடம் 50 ஆயிரம் முகக் கவசங்களை துரை வைகோ வழங்கினார்
HIGHLIGHTS
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு பாதுகாப்பு பணி மற்றும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர். காவல்துறையினரின் நலனில் அக்கறை செலுத்தி பல்வேறு தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க காவல் துறையினருக்கு மாஸ்க் மற்றும் சானிடைசர் வழங்கி வருகின்றனர்.
இன்று துரை வைகோ கொரோனா தொற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினர் பயன்பாட்டிற்காக 50 ஆயிரம், முகக் கவசங்களை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சதன் திருமலைக்குமார், மாவட்ட செயலாளர்கள் கே.எம்.ஏ.நிஜாம், ராஜேந்திரன், இணையதள ஒருங்கிணைப்பாளர் திரு.முகமது அலி ஆகியோர் உடனிருந்தனர்.