/* */

ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் விஷ்ணு

நாளை முழு ஊரடங்கு மீறுபவர்கள் மீது அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்

HIGHLIGHTS

ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் விஷ்ணு
X

திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய்த்தொற்றை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசு நாளை 25.04.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவித்துள்ளது .

முழு ஊரடங்கின் போது பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருந்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி திருமண நிகழ்வில் சமூக இடைவெளியை பின்பற்றி 100 நபர்கள் மட்டுமே நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதனை கண்காணிப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

நாளை மருத்துவம் மற்றும் அவசர காரணங்கள் இன்றி வெளியில் செல்லாமல் முழு ஊரடங்கையை அமல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நோய் தொற்று மற்றும் பிற சந்தேகங்களுக்கு விளக்கம் பெற மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கிவரும் கட்டுப்பாட்டு மையத்தினை 0462-2501070 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு 6374013254 மற்றும் 9499933893 என்ற கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி(SMS) வழியாகவும் வாட்ஸ்அப் மூலமாகவும் தகவல் பெற்றுக்கொள்ளலாம்.

நாளை அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது அரசு உத்தரவின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Updated On: 24 April 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...