/* */

நெல்லையில் திருமண வீட்டில் புகைப்படக்கலைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு

விசேஷ வீட்டில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த புகைப்பட கலைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்த பரிதாப சம்பவம்.

HIGHLIGHTS

நெல்லையில் திருமண வீட்டில் புகைப்படக்கலைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு
X

திருமண வீட்டில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தபோது புகைப்படகாரர் மாரடைப்பால் மயங்கி விழுந்து மரணம். பேட்டை போலீசார் விசாரணை.

நெல்லை சந்திப்பு தட்டாகுடி தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை (52). இவர் புகைப்படம் எடுக்கும் தொழில் செய்து வருகிறார். இன்று பேட்டை செந்தமிழ்நகரில் அறுபதாம் கல்யாண நிகழ்ச்சியினை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக விழாவுக்கு வருகை தந்தவர்கள் புகைப்படக்காரரை பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர். உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அண்ணாதுரை இறந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Sep 2021 4:01 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...