மே தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக் கடைகள், இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்
HIGHLIGHTS
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், கிளப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 01.05.2022 மே தினத்தன்று மூடப்பட்டிருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு அறிவிப்பு.
மே தினத்தை 01.05.2022 (ஞாயிற்றுக்கிழமை) முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும். மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், கிளப்புகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், கிளப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 01.05.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.