நெல்லை - முழு ஊரடங்குஅமல் - அவசிய பணிகளுக்காக 10 சதவீத வாகனங்கள் இயங்கின
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. நெல்லையில் அத்தியாவச பணிகளுக்காக 10 சதவீத வாகனங்கள் வழக்கம்போல் இயங்கியது
HIGHLIGHTS
நெல்லையில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அத்தியாவச பணிகளுக்காக 10 சதவீத வாகனங்கள் வழக்கம்போல் இயங்கின
தமிழகத்தில் கொரோனோ தொற்றை கட்டுப்படுத்த இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது அதன்படி மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் இன்று முதல் ஒரு வாரத்திற்கு அடைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.மேலும் தேவையில்லாமல் பொதுமக்கள் சாலையில் வாகனங்களில் செல்லக்கூடாது எனவும் அரசு அறிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கை மீறுவோரை கண்காணிக்க மாநகர காவல்துறை நகரின் முக்கிய பகுதிகளில் தடுப்புகளை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக வண்ணாரப்பேட்டை நெல்லை சந்திப்பு தச்சநல்லூர் ஆகிய இடங்களில் போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.
அப்போது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வருபவர்களிடம் என்ன காரணத்திற்காக வெளியே வந்தீர்கள் என்று விசாரிக்கின்றனர் உரிய காரணங்கள் மற்றும் ஆவணங்கள் காட்டிய பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர் காரணம் இல்லாமல் வெளியே வரும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரை அத்தியாவச பணிகளுக்காக 10 சதவீதம் இயங்கி வருகிறது