நெல்லையப்பர் திருக்கோவிலில் பரணி தீபம் : ஏற்றம் பக்தர்கள் தரிசனம்
தீப திருவிழாவை முன்னிட்டு, நெல்லையப்பர் திருக்கோவில் மணி மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
HIGHLIGHTS
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2 நாட்கள் திருவிழாவாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருகார்த்திகை தீபத்திருவிழா நெல்லையப்பர் சுவாமி சன்னதி மஹாமண்டபத்தில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வுடன் தொடங்கியது.
இந்த விழாவிற்காக நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமி சன்னதி மணிமண்டபத்தில் 4 அடி உயரத்திற்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பரணி மஹா தீபத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமி நெல்லையப்பர் சன்னதியில் இருந்து தீப சுடர் எடுத்து வரப்பட்டு அரோகரா கோசத்துடன், நேற்று பரணி மஹா தீபம் ஏற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து பரணி தீபத்திற்கு மஹா தீபாரதனை நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 19ம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட பரணி தீபம், ரிசப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளும், சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுடன் ஊர்வலமாக தலையில் சுமந்து எடுத்து வரப்பட்டு, சுவாமி சன்னதி தெரு முகப்பில் வைக்கப்பட்டு ருத்ர தீபம் எனப்படும் சொக்கப்பனையில் ஏற்படும்.