Begin typing your search above and press return to search.
மத்திய கூட்டுறவு வங்கியில் பணியின்போது இறந்தவரின் மனைவிக்கு பணி நியமன ஆணை
மத்திய கூட்டுறவு வங்கியில் பணியின் போது இறந்தவரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையை தலைவர் தச்சை கணேசராஜா வழங்கினார்.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றிய வந்த ஆர்தர் சேவியர் எல்சன் கடந்த 6 மாதத்திற்கு முன் காலமானார்.
இந்நிலையில், வண்ணாரப்பேட்டையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில், அவரது மனைவி ஜாய்ஸ் குமாரிக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் இன்று வழங்கப்பட்டது.
இதனை திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் தச்சை N.கணேசராஜா மற்றும் இணைப்பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான இரா.சுபாஷினி ஆகியோர் பணிநியமன ஆணையை வழங்கினர்.