நெல்லையில் விதிமுறைகளை மீறிய 82 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
82 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 100 வாகனங்கள் பறிமுதல்.முககவசம் அணியாத 934 நபர்கள் மீதும் சமூகஇடைவெளியை பின்பற்றாத 17 நபர்கள் மீதும் அபராதம்.100 வாகனங்கள் பறிமுதல்.
HIGHLIGHTS
நெல்லையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வாகனத்தில் சுற்றிய 82 பேர் மீது மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் அதிவேகமாக பரவி வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவுபடி ஊரடங்கு விதிகளை மீறுவோர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்கள், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கும் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மட்டும் விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 82 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத 934 நபர்கள் மீதும் சமூக இடைவெளியை பின்பற்றாத 17 நபர்கள் மீதும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.