கூகுள்பே மூலம் பணப்பட்டுவாடா ! தேர்தல் ஆணையம் கண்காணிப்பு
வாக்காளர்களுக்கு கூகுள்பே உள்ளிட்ட தளங்கள் மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறதா என தடுப்பு தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது.
2021 தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது, தேர்தலை அமைதியாக நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தேர்தல்ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட தனியார் செயலிகள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் நடைபெற இருப்பதாகத் தெரிகிறது. பல இடங்களில் வாக்காளர்களின் செல்போன் எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டு, 'கூகுள் பே' மூலம் பணம் அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற பணப்பரிமாற்றங்களை தடுப்பதற்காக வங்கி பணியாளர்கள், சைபர் கிரைம் போலீஸார் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியை தேர்தல் ஆணையம் நாடியுள்ளது.இது போன்று ஆப்கள் மூலம் பணம் அனுப்பப்பட்டால் அதை ஒரு ஆதாரமாக எடுத்து வழக்குப்பதிவு செய்யலாம் என்று போலீஸாருக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.