Begin typing your search above and press return to search.
தாமிரபரணி ஆற்றில் மூழ்கியவர் சடலமாக மீட்பு
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் மூழ்கியவர் சடலமாக மீட்கப்பட்டார்.
திருநெல்வேலி அருகே சீவலப்பேரியிலுள்ள ஒரு கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்த 3 சிறுவர்கள் சீவலப்பேரி ஆற்றுப்பாலத்தின் அருகே குளித்துக் கொண்டிருந்தனர். இதில் நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுதர்சன் என்பவரது மகன் ஜோதிமணி என்ற சிறுவன் மட்டும் தண்ணீரில் மூழ்கி பலியானார்.இது குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினர் சிறுவனை சடலமாக மீட்டனர்.இந்த சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.