/* */

தூத்துக்குடியில் உலக கண் பார்வை தின விழிப்புணர்வு மனித சங்கிலி

உலக கண் பார்வை தினத்தையொட்டி தூத்துக்குடியில் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் மனித சங்கிலி நடந்தது.

HIGHLIGHTS

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2வது வியாழக்கிழமை உலக கண் பார்வை தினம் கடைப்பிக்கப்பட்டு வருகிறது. பார்வையின்மை மற்றும் பார்வை குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் தவிர்க்கக்கூடிய பார்வையிழப்பு பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவும் உலக கண் பார்வை தினம் கொண்டாடப்படுகிறது.

80 சதவீதம் பார்வையிழப்பு தவிர்க்கக் கூடியவையே, தவிர்க்கக்கூடிய பார்வையிழப்பு மற்றும் பார்வைக் கோளாறுகளை ஏற்படுத்தும் நோய்கள் குளுகோமா எனப்படும். கண் அழுத்த நோய் மற்றும் சர்க்கரை நோயினால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு போன்றவற்றில் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் நேரு தலைமையில் இன்று கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.

இதில் உறைவிட மருத்துவர் சைலேஸ் ஜெபமணி, மருத்துவர்கள் குமரசாமி, பெரியநாயகி மற்றும் மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கண் பார்வை வழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு கலந்துகொண்டனர்.

கண் பார்வை இழப்பைத் தடுப்பதே இந்த உலகப் பார்வை தினத்தின் நோக்கமாகும். உலக பார்வை தினம் 2021ன் கருத்து வாசகம்."உங்கள் கண்களை நேசியுங்கள்'' என்பதாகும்.

Updated On: 22 Oct 2021 7:46 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்