விரல்ரேகை நிபுணர் தேர்வில் தூத்துக்குடி மாவட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்ச்சி
தனிவிரல் ரேகை நிபுணர்களுக்கான சிறப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் தேர்ச்சி பெற்றனர்.
HIGHLIGHTS
புதுடெல்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் கீழ் செயல்படும் தேசிய விரல் ரேகை பதிவு கூடத்தால் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனைத்திந்திய அளவில் உதவி ஆய்வாளர்களுக்கான விரல் ரேகை நிபுணர் (Finger Print Expert) தேர்வு நடத்தப்பட்டது. இதில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 200-க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தத் தேர்வில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தனி விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்கள் வைஜெயந்தி மாலா, அருணாச்சலம், பிரேம்குமார் மற்றும் பழனிச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு விரல் ரேகை நிபுணர்களாக தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி மாவட்ட விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்கள் நான்கு பேரும் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இன்று (10.04.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
விரல் ரேகை நிபுணர்களாக தேர்ச்சி பெற்ற உதவி ஆய்வாளர்கள் நான்கு பேரும் மென்மேலும் சிறப்பாக பணிபுரிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வாழ்த்து தெரிவித்தார்.