Begin typing your search above and press return to search.
பிசியோதெரபி கவுன்சிலுக்கான அரசாணையை ரத்து செய்ய மனு
மாநில பிசியோதெரபி கவுன்சில் அமைப்பதற்காக போடப்பட்ட அரசாணையை ரத்து செய்து திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
HIGHLIGHTS
மாநில பிசியோதெரபி கவுன்சில் அமைப்பதற்காக போடப்பட்ட அரசாணை பிசியோதெரபிஸ்ட்களின் நேரடி மருத்துவ சேவையை பாதிக்கும் வண்ணம் உள்ளதாகவும், இந்த அரசாணையில் பிஸியோதெரபி மருத்துவர்கள் டாக்டர் என்ற முற்சேர்க்கையை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களான பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் பிஸியோதெரபி மருத்துவர்கள் டாக்டர் என்ற முற்சேர்க்கை பயன்படுத்தும் படியாக உள்ளது. ஆகவே தமிழக அரசு இந்த அரசாணையை ரத்து செய்து பிசியோதெரபி கவுன்சில் அரசாணையை திருத்தம் செய்து வெளியிட வேண்டுமென இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில் மருத்துவர்கள் மணிகண்டன், பத்மநாபன், மைக்கேல், இருதய அந்தோனி அகியோர் கலந்த கொண்டனர்.