தூத்துக்குடியில் நாளை மின்தடை
தூத்துக்குடி மாநகரில் நாளை (பிப்.20 ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகரில் நாளை (20 ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் விடுத்துள்ள செய்திகுறிப்பில்:- நாளை (20.02.2021) சனிக்கிழமை அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிப்காட் வளாகம், கணேசன் நகர், ராஜிவ் நகர், மில்லர்புரம் பகுதிகள், மடத்தூர், பிஅன்டி காலனி, ராஜகோபால் நகர், 3 வது மைல், பத்திநாதபுரம், சங்கர் காலனி, எப்சிஐ குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், இபி காலனி, டைமண்ட் காலனி, மதுரை பைபாஸ் ரோடு, ஏழுமலையான் நகர், ஆசிரியர் காலனி, சில்வர்புரம், பசும்பொன் நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், கிருபை நகர், பால்பாண்டி நகர், அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.