தூத்துக்குடி விமானநிலையத்தில் குடியரசு தினவிழா
தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் இன்று நாட்டின் 72வது குடியரசு தின விழா நடைபெற்றது.
விழாவிற்கு விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன்பின் சமாதான புறா பறக்க விடப்பட்டது. விழாவில் விமான நிலைய இயக்குனர் சிறப்புரையாற்றும் போது, விமான நிலைய வளர்ச்சி பணிகள் நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாகவும் கூடுதல் விமானங்கள் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் விமான நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகளும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.விழாவில் நிலைய மேலாளர்ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.