/* */

திருவாரூரில் தாயும் மகளும் தூக்கு மாட்டி தற்கொலை? : போலீசார் விசாரணை

திருவாரூரில் தாயும் மகளும் ஒரே புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

திருவாரூர் அருகே, தாயும் மகளும் ஒரே புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடல்களை மீட்டு கொலையா, தற்கொலையா என தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சிக்குட்பட்ட விஷ்ணு தோப்பு பகுதியை சேர்ந்தவர் தமிழரசி (65). இவரது மகள் ஜோதி (40) கணவனை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். ஜோதியின் அக்கா மகன் முகிலன் (19) என்பவரை வளர்த்து வருகின்றனர். ஜோதி தனியார் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் முகிலன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஜோதியும், தமிழரசியும் ஒரே புடவையில் தூக்கில் தொங்கி உள்ளனர். மேலும் வீடு முழுவதும் ரத்தக்கரை இருந்ததால் உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் தெரிவித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் நேரில் விசாரணை மேற்கொண்டு உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த இருவரது மரணம் கொலையா? தற்கொலையா? என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 21 May 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?