திருவாரூர்: 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
திருவாரூர் பின்னவாசல், பகுதியில் கொரோனா இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம் நடை பெற்றது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம், நிலையான தடுப்பூசி முகாம், மருத்துவமனைகள் என பல்வேறு வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை எளிதாக்கி, செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இதுவரை முதற்கட்ட கொரோனா தடுப்பூசியாக 5,17,950 நபர்களுக்கும், இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசியாக 1,11,179 நபர்கள் என 6,29.129 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் 29,800 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காக நிர்ணயித்து 319 இடங்களில் மாபெரும் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.மேலும் தமிழக அரசு கோவிட்-19 முடிவுகளை பதிவிறக்கம் செய்ய https://t.co/C48xoBB8Cw என்ற இணையதளத்தை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இதன் மூலம் தங்களது RT-PCR பரிசோதனை முடிவுகளை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.