/* */

திருவாரூர் நகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க.வினர் வேட்புமனு தாக்கல்

திருவாரூர் நகராட்சி 30 வார்டுகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க.வினர் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

திருவாரூர் நகராட்சியில் போட்டியிடும்  அ.தி.மு.க.வினர் வேட்புமனு தாக்கல்
X

திருவாரூர் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்வதற்காக வந்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது, இதனையொட்டி வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைய உள்ளதால் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் அ.தி.மு.க.வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 30 பேரும் இன்று ஒரே நாளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

குறிப்பாக நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி, மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்டோர் இன்று ஒரே நாளில் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

Updated On: 3 Feb 2022 10:20 AM GMT

Related News