தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்
அரசு பள்ளியில் மாணவியர் சேர்க்கை இன்று அதிகரித்திருக்கும் சூழ்நிலையில் அதற்கு ஏற்றார்போல் ஆசிரியர் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை.
HIGHLIGHTS
திருவாரூர் அருகே புலிவலம் தனியார் அரங்கில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் பொதுச் செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநில தலைவராக ரவி தேர்ந்தெடுக்கப்பட்டார் தொடர்ந்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொதுச் செயலாளர் சண்முகநாதன் தெரிவித்ததாவது:
கடந்த 10 ஆண்டுகளாக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பல்வேறு வகையில் அலைகழிக்கப்பட்டனர். அவர்கள் பெற்ற வந்த சலுகைகளையும் உரிமைகளையும் இழந்தனர். இழந்த சலுகைகளையும் உரிமைகளையும் மீண்டும் பெறுவதற்காக பலகட்ட போராட்டங்களை நடத்தியும் கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் பேச்சு வார்த்தைக்கு கூட அழைக்கவில்லை. இவ்வாறு போராடிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை பலி வாங்கியது கடந்த கால ஆட்சியாளர்கள். அவற்றையெல்லாம் விலக்கி தமிழகத்தின் தற்போதைய முதல்வர் புதிய உத்தரவிட்டிருக்கிறார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில அமைப்பின் சார்பில் புதிய கல்விக் கொள்கை கருத்தரங்கம் புதுக்கோட்டையில் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என இந்த பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அரசு பள்ளியில் மாணவியர் சேர்க்கை இன்று அதிகரித்திருக்கும் சூழ்நிலையில் அதற்கு ஏற்றார்போல் ஆசிரியர் எண்ணிக்கையை அரசு நியமிக்க வேண்டும் என்றார்.