திருவாரூர் அருகே குடியிருப்பு பகுதியில் உயர் மின்னழுத்த கோபுரம்: வாகனம் சிறை பிடிப்பு
திருவாரூர் அருகே குடியிருப்பு பகுதியில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
திருவாரூர் அருகே குடியிருப்பு பகுதியில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் திருவிக நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் 110 கிலோவாட் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கப்படுவதாக தெரிகிறது.உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதற்கு இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் அதற்கான பணி துவங்கியது. உடனடியாக அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து பணியை தடுத்து நிறுத்தி ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்தனர்.
பின்னர் அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மாற்றுப்பாதை இருக்கும் நிலையில் குடியிருப்புக்கு மத்தியில் மின்னழுத்த கோபுரம் அமைப்பது ஏன் என்று இப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர். மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கதிர்வீச்சு மூலம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்தனர்.
குடியிருப்பு பகுதியில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதைஉடனடியாக காய் விட்டு விட்டு மாற்றுப்பாதையில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.