திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டுவருகிறது. அந்தவகையில் தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மக்களும் ஆர்வமுடன் முகாம்களுக்கு வந்து தடுப்பூசி செலுத்தி செல்கின்றனர். அதேபோல், கொரோனா தடுப்பூசி தொடர்பாக பல்வேறு வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம், நிலையான தடுப்பூசி முகாம், மருத்துவமனைகள் என பல்வேறு வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை எளிதாக்கி, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இதுவரை முதற்கட்ட கொரோனா தடுப்பூசியாக 6,63,972 நபர்களுக்கும், இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசியாக 3,11,762 நபர்களுக்கும் என மொத்தம் 975734 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கீழவீதியிலுள்ள திருவாரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் இயங்கிவரும் நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து குடிமை பொருள்களின் பாதுகாப்பு மற்றும் எடை இயந்திரம் உள்ளிட்டவற்றை சோதனை செய்தார்.
இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், மாவட்ட வழங்க அலுவலர் கீதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.