திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இலவச புத்தக வங்கி துவக்கம்
தமிழகத்திலேயே முதல் முறையாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவச புத்தக வங்கி துவங்கப்பட்டு உள்ளது.
HIGHLIGHTS
மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் புத்தக வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் புத்தக வங்கியை திறந்து வைத்தார்.
இந்த புத்தக வங்கியில் இருந்து பொதுமக்களும், மாணவர்களும் எவ்வித கட்டணமும் இன்றி புத்தகங்களை தங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்துவிட்டு மீண்டும் கொண்டு வந்து வைக்கலாம். மேலும் தங்களிடம் உள்ள புத்தகங்களை நன்கொடையாக வழங்க விரும்பினாலும் இந்த புத்தக வங்கியில் வைக்கலாம். தமிழகத்திலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவச புத்தக வங்கி துவக்கி இருப்பது திருவாரூரில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.