Begin typing your search above and press return to search.
திருவாரூரில் ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி 300க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பிரேமா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நிரந்தரம் செய்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், அங்கன்வாடி கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கிதர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் மாலதி, சங்கத்தின் மாவட்ட செயலாளர் தவமணி உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.