Begin typing your search above and press return to search.
சசிகலாவின் சொந்த ஊரான திருவாரூர் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிரான தீர்மானம்
சசிகலாவின் சொந்த ஊரான திருவாரூர் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
HIGHLIGHTS
திருவாரூரில் தனியார் அரங்கத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலருமான ஆர். காமராஜ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சசிகலாவை கண்டித்து, அவருக்கு துணைபோகும் கட்சி நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள் என்ற தீர்மானம் முதலில் எடுக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும், விவசாயிகளுக்கு தரமான விதை, உரம், பூச்சி மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்வதுமான 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட, கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.