/* */

உத்தமபாளையத்தில் லாரி டிரைவரிடம் வழிப்பறி செய்த இருவர் கைது

லாரி டிரைவரிடம் வழிப்பறி செய்த குற்றவாளிகளை 10 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

உத்தமபாளையத்தில் லாரி டிரைவரிடம் வழிப்பறி  செய்த இருவர் கைது
X

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பழைய பைபாஸ் சாலையை ஒட்டியுள்ள வாய்க்கால் பகுதி அருகே மட்டப்பாறை நிலக்கோட்டையை சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜ்குமார் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் லாரி டிரைவர் ராஜ்குமாரை வழிமறித்து அவரிடமிருந்த 8000 ரூபாய் பணத்தையும், பத்தாயிரம் மதிப்புள்ள அலைபேசியினையும் வழிப்பறி செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி விட்டனர். ராஜ்குமார் உத்தமபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து செயல்பட்டு, சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான ராஜ்குமார் மற்றும் ரோபின் ஆகியோரை கைது செய்தனர். சம்பவம் நடந்த 10 மணி நேரத்திற்குள் கைது செய்து அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த பணம், அலைபேசி மற்றும் வழிப்பறி செய்ய பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

Updated On: 15 Aug 2022 5:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  4. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  5. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  6. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  8. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  9. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  10. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?