Begin typing your search above and press return to search.
உத்தமபாளையத்தில் லாரி டிரைவரிடம் வழிப்பறி செய்த இருவர் கைது
லாரி டிரைவரிடம் வழிப்பறி செய்த குற்றவாளிகளை 10 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
HIGHLIGHTS
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பழைய பைபாஸ் சாலையை ஒட்டியுள்ள வாய்க்கால் பகுதி அருகே மட்டப்பாறை நிலக்கோட்டையை சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜ்குமார் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் லாரி டிரைவர் ராஜ்குமாரை வழிமறித்து அவரிடமிருந்த 8000 ரூபாய் பணத்தையும், பத்தாயிரம் மதிப்புள்ள அலைபேசியினையும் வழிப்பறி செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி விட்டனர். ராஜ்குமார் உத்தமபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து செயல்பட்டு, சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான ராஜ்குமார் மற்றும் ரோபின் ஆகியோரை கைது செய்தனர். சம்பவம் நடந்த 10 மணி நேரத்திற்குள் கைது செய்து அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த பணம், அலைபேசி மற்றும் வழிப்பறி செய்ய பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.