/* */

சாலையோரம் நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே சாலையில் நின்றிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

HIGHLIGHTS

சாலையோரம் நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு
X

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நவலூர் பிரிவு சாலை பகுதியில் நின்றிருந்த டிப்பர் லாரி மீது பைக் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (38). இவர் துவாக்குடி பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். தஞ்சையில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்று விட்டு இவர் தனது பைக்கில் உதயநிதி (17) என்பவருடன் துவாக்குடி நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது நவலூர் பிரிவு சாலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டிப்பர் லாரி மீது பைக் மோதியது. இதில் ராஜேஷ், உதயநிதி இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். தகவலறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 22 April 2022 12:17 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை