சாலையோரம் நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே சாலையில் நின்றிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
HIGHLIGHTS
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நவலூர் பிரிவு சாலை பகுதியில் நின்றிருந்த டிப்பர் லாரி மீது பைக் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (38). இவர் துவாக்குடி பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். தஞ்சையில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்று விட்டு இவர் தனது பைக்கில் உதயநிதி (17) என்பவருடன் துவாக்குடி நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது நவலூர் பிரிவு சாலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டிப்பர் லாரி மீது பைக் மோதியது. இதில் ராஜேஷ், உதயநிதி இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். தகவலறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.