/* */

ஆயிரம் ஆடு, 10 வேன்களில் சாதம்,10 ஆயிரம் ஆண்களுக்கு விருந்து

திருவோணம் அருகே 200 ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கு பெறும் கோவில் பூஜையில் 1000 ஆட்டு கிடாக்கள் வெட்டி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஆயிரம் ஆடு, 10 வேன்களில் சாதம்,10 ஆயிரம் ஆண்களுக்கு விருந்து
X

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தை அடுத்து தளிகை விடுதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற நல்லபெரம அய்யனார், செம்முனி, முத்து முனி கோவில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கோவில் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது

இந்த கோவிலில் கடந்த இருநூறு வருடங்களாக பாரம்பரிய முறைப்படி ஆடி வெள்ளிக்கிழமையன்று கிடாவெட்டு பூஜை விழா நடந்து வருகிறது. அதன்படி நேற்று இரவு இந்த விழா தொடங்கியது .

விழாவில் கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய செம்மறியாடு , வெள்ளாடு என ஆயிரம் ஆடுகள் வெட்டப்பட்டு கோவில் அருகிலேய கறி குழம்பு தயார் செய்யப்பட்டது. 100 மூட்டை அரிசி கொண்டு சாதம் வடிக்கப்பட்டு 10 வேன்களில் கொண்டுவரப்பட்டது.

இன்று காலை 8 மணி முதல் சுற்றுவட்டார 25 கிராமங்களை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள், ஆண்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைவரும் தரையில் அமர்ந்து வாழை இலையில் கறி விருந்து உண்டு மகிழ்ந்தனர்.

Updated On: 12 Aug 2022 1:20 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...