/* */

தஞ்சை: 30 கோயில்களில் அன்னதானம் போடும் திட்டம் மீண்டும் தொடக்கம்

இரண்டு வருடங்களுக்கு பிறகு தஞ்சையில் 30 கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கியது.

HIGHLIGHTS

தஞ்சை:  30 கோயில்களில் அன்னதானம் போடும் திட்டம் மீண்டும் தொடக்கம்
X

கோயில் அன்னதான திட்டம்(பைல்படம்)

இரண்டு வருடங்களுக்கு பிறகு தஞ்சையில் 30 கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கியது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் ஆலயங்களில் பக்தர்களுக்கு அர்ச்சனை, பிரசாதம் வழங்க முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதேபோல் கோயில்களில் மதியம் வேலை வழங்கப்படும் அன்னதான திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கியது. தஞ்சையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான 26 கோயில்களிலும், அரண்மனை தேவஸ்தானத்திற்கு சொந்தமான நான்கு கோயில்களிலும் அன்னதானம் போடும் பணி தொடங்கியது.

இதில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு சொந்தமான புன்னைநல்லூர் மாரியம்மன், கோடியம்மன், கொங்கணேஸ்வரர், உள்ளிட்ட ஆலயங்களில் 400 பேருக்கு அன்னதானம் போடும் திட்டம் தொடங்கியது. முன்னதாக அன்னதான கூடத்தில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. பணியில் இருக்கும் ஊழியர்கள், கை கால்களை முறையாக சுத்தம் செய்து, முகக்கவசம் அணிந்து பக்தர்களுக்கு அன்னதானம் அளித்தனர்.

Updated On: 20 Sep 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...