பொது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கல்லூரி பேராசிரியர்களை நியமிக்க கோரிக்கை
பொது டிஆர்பி முறையினை அமல்படுத்தி UGC தகுதி அடிப்படையில்பேராசிரியர்களை தேர்வுசெய்ய தனியார்கல்லூரி பேராசிரியர்கள்கோரிக்கை
HIGHLIGHTS
பொது டிஆர்பி (TRB ) அமைத்து கல்லூரிகளில், பேராசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என தனியார் கல்லூரி பேராசிரியர்கள் கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் யுஜிசி விதிகளுக்கு உட்பட்டு, முழுத் தகுதியுடன் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அனைவருக்கும் குறைந்த ஊதியமே கிடைத்து வருகிறது. 20 வருட பணி அனுபவம் இருந்தும், தங்களின் ஊதியம் 10 ஆயிரத்தை தாண்டவில்லை. முறைகேடாக தேர்வு செய்யப்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணி வரன்முறைபடுத்துவதால், தனியார் சுயநிதி கல்லூரிகளில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான பேராசிரியர் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, பொது டிஆர்பி முறையினை அமல்ப்படுத்தி யுசிஜி தகுதி அடிப்படையில் பேராசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என அனைத்து தனியார் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் 50 க்கும் மேற்பட்டவார்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.