Begin typing your search above and press return to search.
தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் இன்றி பிரதோஷ வழிபாடு நடந்தது
மஹா சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கு ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
HIGHLIGHTS
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோல் ஆவணி மாதத்தின் இரண்டாவது பிரதோஷம் மஹா சனி பிரதோஷமாக வந்தையொட்டி, பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் கரும்புச்சாறு உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்களுக்கு வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. எப்போதும் சனி பிரதோஷம் அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய கோவிலில் வழிபாடு செய்வார்கள். ஆனால் இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் பக்தர்கள் யாரும் இன்றி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.