கல்வித்துறை குறித்த ஆளுநரின் நடவடிக்கை மாறும்: அமைச்சர் பொன்முடி நம்பிக்கை
மூன்றாவது மொழி விருப்ப பாடமாக இருக்க வேண்டுமே தவிர கட்டாயப் பாடமாக இருக்க கூடாது
HIGHLIGHTS
கல்வித்துறை குறித்து கேட்டறிந்துள்ளார். ஆளுநரின் நடவடிக்கை வரவர மாறும் என்றார் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
தஞ்சாவூர் அருகே வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் திராவிட கழக தலைவரும், பல்கலைக்கழக வேந்தருமான கி.வீரமணி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி மேலும் கூறியதாவது: மாணவர்கள் மூன்றாவது மொழி படிப்பதில் நாங்கள் எதிர்க்கவில்லை . மூன்றாவது மொழி விருப்ப பாடமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டாய பாடமாக இருக்க கூடாது. கடந்த காலத்தில் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக திமுக கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டது. இப்போதைய தமிழக ஆளுநர் நேற்று துணைவேந்தர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை குறித்து கேட்டுள்ளார். அவ்வளவுதான், அவரின் நடவடிக்கை வர வர மாறும் என்றார் அமைச்சர் பொன்முடி.