/* */

காலை உணவுத் திட்டம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பயன் பெறும் 1442 மாணவ மாணவிகள்

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

காலை உணவுத் திட்டம்: தஞ்சாவூர் மாவட்டத்தில்  பயன் பெறும் 1442 மாணவ மாணவிகள்
X

தஞ்சாவூர் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவுத்திட்டத்தை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையிவ் தொடக்கி வைத்த அரசு கொறடா கோ.வி. செழியன் மற்றும் எம்எல்ஏ-க்கள்

தமிழக முதல்வரின் காலை உணவுத்திட்டம் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 21 மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 1442 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

நகரப் பகுதிகளிலும் ,கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுடவில்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பதுமட்டுமல்ல. சிலருடையகுடும்பசூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது. இதனைமனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாம் தீட்டி இருக்கிறோம்.

முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படும். ஒன்றாம் வகுப்புமுதல் ஐந்தாம் வகுப்புவரைபயிலக்கூடியதொடக்கப் பள்ளிமாணவர்களுக்குஅனைத்துப் பள்ளிநாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்" என்று ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 7.5.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.

ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு. எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்ட போதிலும், முதலமைச்சரின் காலைஉணவுத் திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்றும், பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்குவது, கற்றலை இனிமையாக்குவது என்ற நோக்கத்தில் "முதலமைச்சரின் காலைஉணவுத் திட்டம்"முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதிலும்,ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதிலும் சந்தேகம் இல்லை என்றுமுதலமைச்சரின் காலைஉணவுத் திட்டத்திற்கான அரசாணையினை வெளியிட்ட நாளன்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். நாட்டிலேயே முன்னோடி திட்டமான முதலமைச்சரின் காலைஉணவுத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 417 மாநகராட்சிபள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சிபள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராமஊராட்சிபள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர மலைப்பிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள். என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு 1,14,095 மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

மாணவ மாணவியகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறை பாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல்,வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச் சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டம் குறித்து தஞ்சாவூர் மாவட்டஆட்சித் தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது:

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகராட்சியில் 8 தொடக்கப் பள்ளியில் பயிலும் 375 மாணவ மாணவிகளுக்கு திங்கட்கிழமை தோறும் சேமியா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்,செவ்வாய்க்கிழமை தோறும் கோதுமை ரவா காய்கறி கிச்சடி, புதன்கிழமை தோறும் வெண் பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார்,வியாழக்கிழமை தோறும் அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை தோறும் ரவா காய்கறி கிச்சடி மற்றும் கூடுதலாக சேமியா கேசரியும், வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று கும்பகோணம் மாநகராட்சியில் 13 தொடக்கப் பள்ளியில் பயிலும் 1067 மாணவ, மாணவிகளுக்கும் திங்கட்கிழமை தோறும் ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் செவ்வாய்க்கிழமை தோறும் ரவா காய்கறி கிச்சடி, புதன்கிழமை தோறும் வெண் பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை தோறும் கோதுமை ரவை உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்,வெள்ளிக்கிழமை தோறும் கோதுமை ரவா காய்கறி கிச்சடி மற்றும் கூடுதலாக ரவாகேசரி வழங்கப்பட்டு வருகிறது ஆக மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 21 மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 1442 மாணவ, மாணவிகள் இத்திட்டம் மூலம் பயன்பெறுகின்றனர்

தஞ்சாவூர் மாநகராட்சி பள்ளிகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் கூட்டுறவுகாலனி மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், கும்பகோணம் மாநகராட்சி பள்ளிகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் கோபுசிவகுருநான் மாநகராட்சிதொடக்கப்பள்ளி யில் ஒருங்கிணைப்பு மையங்களில் உள்ள சமையல் கூடங்களில் (Centralised Kitchen) உணவு தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது

மாணவ மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல் ஊட்டச்சத்து குறை பாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல்,வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச் சுமையை குறைத்தல், ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர்.

இத்திட்டத்தில் பயன் பெறும் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கருத்து: தஞ்சாவூர் கூட்டுறவு காலனி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்புபயின்று மாணவி ஓவியதிலகம் கூறியது: நானும் என் நண்பர்களும் தினமும் பள்ளியில் வழங்கப்படுகின்ற காலைஉணவினை விரும்பி சாப்பிடுகின்றோம். சில சமயங்களில் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருகின்ற சூழ்நிலைத ற்பொழுது முழுவதுமாக மாறி விட்டது,தினமும் காலையில் வழங்கப்படுகின்ற சூடானஉணவு வகைகள் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தைசேர்ந்த மாணவர் கதிரேசன் தாய் அஞ்சலை கூறுயது: கூலி வேலைக்குச் செல்வதால் காலை உணவு வீட்டில் சமைக்க முடியாத நிலை தற்போது பள்ளியில் காலை உணவுத் திட்டத்தால் மாறிவிட்டது. இத்திட்டத்தை கொண்டு வந்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். தஞ்சை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க. பிரேமலதா இச்செய்தி தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

Updated On: 28 Oct 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  2. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  3. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  5. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  6. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  7. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  8. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  9. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...
  10. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!