Begin typing your search above and press return to search.
பஞ்சாப் அரசை கண்டித்து தஞ்சையில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம்
பிரதமர் பாதுகாப்பிலர் குழப்பம் ஏற்படுத்திய பஞ்சாப் அரசை கண்டித்து தஞ்சையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி செய்து, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று தஞ்சை ரயிலடியில் தெற்கு மாவட்ட பா ஜ க. ஓ.பி.சி.அணி, அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு, வர்த்தகப் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ரயிலடியில் இருந்து நீண்ட தூரத்திற்கு கட்சியினர் கைகோர்த்து அணிவகுத்து நின்றனர். பின்னர் பஞ்சாப் அரசை கண்டித்து அனைவரும் கையொப்பமிட்டனர். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.