/* */

முக்காலி போட்டு அமர்ந்து, பொறுமையாக சைக்கிளை திருடி சென்ற ஆசாமி

தஞ்சையில் முக்காலி போட்டு அமர்ந்து, பொறுமையாக சைக்கிளை திருடி சென்ற ஆசாமி பற்றிய காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளன.

HIGHLIGHTS

முக்காலி போட்டு அமர்ந்து, பொறுமையாக சைக்கிளை திருடி சென்ற ஆசாமி
X
சைக்கிள் திருடுவதற்கு முக்காலியுடன் வந்த ஆசாமி.

தஞ்சாவூர் ராஜகோபால்சாமி கோவில் தெருவில், தனியார் மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளிக்கு எதிரே மாணவர்கள் இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு நிறுத்தி வைக்கும் சைக்கிள்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, வெள்ளை சட்டை, காவி வேட்டி, கையில் முக்காலியுடன் வரும் மர்ம நபர், ஒரு முறை நோட்டமிட்டு பிறகு, மீண்டும் வாசலில் முக்காலி போட்டு சில நிமிடங்கள் அமர்ந்து சாலையில் வேவு பார்த்துள்ளார்.

அப்போது மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், சொந்த சைக்கிளை நிறுத்தி வைத்து எடுத்து செல்வது போல் சைக்கிளை திருடி சென்றுள்ளார். இவை அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த பகுதியில் மட்டும் ஒரே வாரத்தில் 15 சைக்கிள் திருட்டு போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ பதிவுகளின் அடிப்படையில் போலீசார் மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.

Updated On: 5 May 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா