/* */

திருவையாறு பைக் திருடனிடமிருந்து 18 பைக்குகள் பறிமுதல்

தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பைக் திருட்டு போன சம்பவத்தில் திருவையாறு பகுதியை சேர்ந்தவரிடமி 18 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

திருவையாறு பைக் திருடனிடமிருந்து 18 பைக்குகள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகளுடன் கோபிநாத்

தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பைக்குகள் திருடப்படும் சம்பவங்கள் நடந்து வந்தது. முக்கியமாக தஞ்சை பகுதியில் ராஜா மிராசுதார் மருத்துவமனை, புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்று பைக்குகள் திருடப்பட்டு வந்தன. .இதையடுத்து மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கேசவமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பல இடங்களில் பைக்குகள் திருட்டு போன இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதில் ஒரு நபரின் உருவம் மட்டும் பதிவாகியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபரை போலீஸார் தேடி வந்தபோது நடுக்காவேரி காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய, திருவையாறு அருகே கருப்பூர் காலனி தெருவைச் சேர்ந்த கோபிநாத் (41) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை பிடித்து விசாரித்த போது, அவர் மாவட்டம் முழுவதும் பைக்குகளை திருடி அதனை, மணல் திருட்டுக்காக குறைவான விலையில் திருவையாறு பகுதியில் விற்பனை செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் திருவையாறு, நடுக்காவேரி, கருப்பூர் ஆகிய இடங்களில் கோபிநாத் விற்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள 18 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கோபிநாத்தை செங்கிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

Updated On: 7 April 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...